Total Pageviews

28 November 2010

தந்தை

தமிழ்லில் ஒரு பழமொழியாம் -அது
தந்தை சொல்மிக்க மந்திரமில்லயாம்

என் தந்தை சுமந்திருந்த எங்கள் குடும்பத்தை -என் முதுகில்
இறக்கி விட்டார் -நானும் அந்த பழமொழியை நினைவில் கொண்டு
ஏற்க தொடங்கினேன்

என் தந்தை ஒரு சுயநலவாதி : அவரின் நாவு ருசிக்காக எங்களை உண்ணாத விரதம் இருக்கச் சொன்னார்-அவருக்கு சாராய கடையில் கிடைத்த ருசி இன்னும் வீட்டில்க் கூட கிடைக்க வில்லையாம்

என் தந்தை ஒரு சமூகவாதி : சொத்து சேர்த்து வைத்து விட்டால் சோம்பேறியாக விடுவானோ என்ற நல் எண்ணத்தில் அவன்,உழைத்து உண்ணல் வேண்டும் என்ற நற்-பண்பில் ஒதுங்குவதர்க்குக் கூட இடம் இல்லாமல் செய்து விட்டார்.
நானும்,உழைப்பதற்கு வயதில்லை என்று உழைக்க தொடங்கினேன் என் குழந்தை பருவம் முதலே

அரசு ஒரு சட்டம் தீட்டியது.., அது
குழந்தை தொழிலாளர்களை பணியில் வைத்தால் தொழிற்ச்சாலையை மூடி விடுவோம் என்று
பாவம்,அரசுக்கு ஒன்று தெரியாது போலும்,
இந்த குழந்தை பணிக்கு சென்றால் தான் குடும்பம் என்னும் தொழிற்ச்சாலை திறந்திருக்கும் என்று.....,

No comments:

Post a Comment