Total Pageviews

28 November 2010

தந்தை

தமிழ்லில் ஒரு பழமொழியாம் -அது
தந்தை சொல்மிக்க மந்திரமில்லயாம்

என் தந்தை சுமந்திருந்த எங்கள் குடும்பத்தை -என் முதுகில்
இறக்கி விட்டார் -நானும் அந்த பழமொழியை நினைவில் கொண்டு
ஏற்க தொடங்கினேன்

என் தந்தை ஒரு சுயநலவாதி : அவரின் நாவு ருசிக்காக எங்களை உண்ணாத விரதம் இருக்கச் சொன்னார்-அவருக்கு சாராய கடையில் கிடைத்த ருசி இன்னும் வீட்டில்க் கூட கிடைக்க வில்லையாம்

என் தந்தை ஒரு சமூகவாதி : சொத்து சேர்த்து வைத்து விட்டால் சோம்பேறியாக விடுவானோ என்ற நல் எண்ணத்தில் அவன்,உழைத்து உண்ணல் வேண்டும் என்ற நற்-பண்பில் ஒதுங்குவதர்க்குக் கூட இடம் இல்லாமல் செய்து விட்டார்.
நானும்,உழைப்பதற்கு வயதில்லை என்று உழைக்க தொடங்கினேன் என் குழந்தை பருவம் முதலே

அரசு ஒரு சட்டம் தீட்டியது.., அது
குழந்தை தொழிலாளர்களை பணியில் வைத்தால் தொழிற்ச்சாலையை மூடி விடுவோம் என்று
பாவம்,அரசுக்கு ஒன்று தெரியாது போலும்,
இந்த குழந்தை பணிக்கு சென்றால் தான் குடும்பம் என்னும் தொழிற்ச்சாலை திறந்திருக்கும் என்று.....,

அன்புள்ள காதலிக்கு

இது என் நண்பனின் காதளுக்குகாக எழுதியது,

காதல் எனும் சோலையில் பூத்த புதிய மலரே
காலன் வந்து என்னை தூக்கிச் சென்றாலும்
என்னை தீயிலிட்டு வருத்தாலும்
என் நினைவில் எழுதப்பட்ட உன் பெயர் அழியாது

மூச்சின் கற்று விண்ணுலகை நோக்கி பயணிக்கும் போதும்
உன் பெயர் கொண்ட சொல் அழியாது

இனிமையான மொழியாம் என் தாய் மொழி தமிழ் -அதில்
ஆயிரம் சொற்கள் கொட்டி கிடக்க -அதில் மூன்று சொற்கள் மட்டும்
என் நாவில் வளம் வருவது ஏன்

மூன்று வார்த்தை கொண்ட மொழியாம் மௌனம் -அதில்
உலகம் அடங்கும் -மூன்று வார்த்தை கொண்ட பெயராம் அதில்
என் உயிர் அடக்கம்

உன் இனிமையான பெயரை கேட்ட இந்த செவிகளுக்கு -
வேறு பெயர் கேட்பதற்கு கசக்கிறது

அடி பெண்ணே கேள் !
நீ இல்லாத ஒரு உலகம் என் கனவிலும் கொல்லாது
உன் பெயரில்லாத என் பெயர் எந்த கல்லறையிலும் இருக்காது

பெயர் சொல்லாத ஒருவனை கடவுள் என்பேன்
பெயர் சூடிய உன்னை பிரியா என்பேன்